Saturday, November 8, 2008

சிலம்பொலி செல்லப்பனார்

சிலம்பொலி சு.செல்லப்பனார் தமிழ்கூறு நல்லுலகில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் தமிழறிஞர்.சிலப்பதிகாரம் பற்றிய இவரது பொழிவுகள் சிலம்பொலி என்னும் சிறப்புப்பெயர் இவருக்கு வழங்கக் காரணமாயிற்று எனலாம்.மணிமேகலை,பெருங்கதை ஆகியவற்றையும் நுணுகியறிந்து கற்றுப் பரப்பிவருபவர்.சங்க இலக்கியம்,பாரதிதாசன் பாடல்கள் பற்றி அறியவிரும்புபவர்கள் இவரது பொழிவைக் கேட்டால் பெரும்பயன் பெறுவர் என்பது உறுதி.
நாடறிந்த இந்நற்றமிழறிஞர் எளியமுறையில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தமிழைப் பரப்பிவருகிறார்.பாரதிதாசன் மரபுப்பாவலர்கள் அனைவரையும் நன்கு அறிந்தவர்.இக்காலக் கவிஞர்களின் கவிதைகளை எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்பவர் இவரே.
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பெருங்கதை,சீறாப்புராணம்,இராவணகாவியம்
ஆகிய இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய தொடர்பொழிவுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.தமிழிலக்கியங்களை மேடையிலும் நூல்கள் வாயிலாகவும் பரப்பிவரும் இவரது தமிழ்ப்பணி வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும்.

1 comment:

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்