Saturday, November 8, 2008

சங்க இலக்கியத்தேன்

பத்துப்பாட்டு நூல்களைப் பற்றி இவர் ஆற்றிய பொழிவுகள்
”சங்க இலக்கியத்தேன்” என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளன.இவர் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிப் பேசிய நாள்களும் அக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களும்:
நாள்: நூல்: கூட்டத்தலைவர்
6-1-1990 திருமுருகாற்றுப்படை முனைவர் அகஸ்டின் செல்லப்பா
20-1-1990 பொருநராற்றுப்படை கவியரசர் பொன்னிவளவன்
3-2-1990 சிறுபாணாற்றுப்படை முனைவர் தி.சாம்பமூர்த்தி
3-3-1990 முல்லைப்பாட்டு பெரும்புலவர் க.பழனி பாலசுந்தரனார்
17-3-1990 மதுரைக்காஞ்சி திரு. அரு.சங்கர்
7-4-1990 நெடுநல்வாடை திரு.முகம் மாமணி
21-4-1990 குறிஞ்சிப்பாட்டு திரு.சு.இலம்போதரன்
5-5-1990 மலைபடுகடாம் கவிஞர்.இளஞ்சேரல்
16-6-1990 பெரும்பாணாற்றுப்படை திரு.க.முனிராசன் எம்.ஏ. எம்.எட்.
இப்பொழிவுகள் அன்றில் பதிப்பகத்தாரால் நூல்வடிவம் பெற்றன.
மூன்று மடலங்கள்(Volumes)கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
மடலம்-1.திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை
மடலம்-2.முல்லைப்பாட்டு,மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை
மடலம்-3.குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை,மலைபடுகடாம்
இந்நூலுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வாழ்த்துரையும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் அணிந்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
‘செல்லப்பன் போன்றவர்கள் தங்கள் முழு நேரத்தையும் இலக்கியப்பணிகளுக்காகவே செலுத்திவருவதால் இதுபோல் மேலும் பல நல்ல நூல்கள் சங்க இலக்கியங்கள் பற்றி வெளிவந்திட தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.”-கலைஞர் மு.கருணாநிதி

“இவ்விரிவுரை ஒவ்வொன்றும் கொற்கைவெண்முத்துக்களைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டி வைத்துப் பரிசளித்தது போன்றும் இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித்தட்டில்
நிரப்பி உண்ணத்தந்தது போன்றும் உளம் மகிழ்வளித்தது.”
-------பேராசிரியர் க.அன்பழகனார்

No comments: