Saturday, November 8, 2008

நல்ல குறுந்தொகை

சிலம்பொலியாரின் “நல்ல குறுந்தொகையில் நானிலம்” என்னும் நூல்
பாரதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.(மு.ப.1959)
நிலவகை என்னும் முதல் இயலில் தமிழ் அக இலக்கணம் கூறும் நானில வகைப்பாட்டை விளக்குகிறார்.(ப.5-11)
இரண்டாம் இயல் குறிஞ்சி என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை நூலில் இடம்பெற்றுள்ள குறிஞ்சித்திணைப்பாடல்களின் உவமைநயத்தை விளக்குகிறது.(ப.12-50)
மூன்றாம் இயல் பாலை என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை பாலை நிலம் குறித்து வழங்கும் வண்ணனைகளையும் உவமைநயத்தையும் எடுத்துரைக்கிறது.(ப.51-76)
நான்காம் இயல் முல்லை என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை வழங்கும் முல்லைநில வண்ணனைகளைத் தொகுத்துரைக்கிறது.(ப.76-90)
ஐந்தாம் இயல் மருதநில வண்ணனைகளைக் குறுந்தொகை வழங்குமாற்றை விவரிக்கிறது.(ப.90-104)
ஆறாம் இயல் நெய்தல் என்னும் தலைப்பில் குறுந்தொகை காட்டும் நெய்தல்நிலச் சிறப்பை விளக்குகிறது.(104-128)
'நல்ல குறுந்தொகையில் நானிலம்' என்னும் தலைப்பில் இந்நூல் அமைந்திருந்தாலும்
பலையையும் சேர்த்து ஐவகை நிலங்களின் சிறப்பை வழங்குகிறது.தொல்காப்பியமரபையொட்டி இந்நூல் அமைந்துள்ளமை போற்றத்தக்கது

No comments: